தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குணமடையும் கொரோனா வைரஸ் நோயாளிகள்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 39 பேருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் கடந்த 31 ஆம் தேதி முதல் கட்டமாக பாதிப்பு கண்டறியப்பட்ட 20 பேர் தொடர் சிகிச்சை காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பினார்
இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது கொரோனா வைரஸ் தொற்று ஆளானவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெண்டிலட்டர் என்னும் சுவாசக் கருவி பொருத்தும் நிலை ஏற்படும்.
ஆனால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் யாரும் அந்த நிலை ஏற்படவில்லை.
ஒரு இயல்பான நிலையில் இருப்பதால் அனைவரும் குணமடைந்து வருகின்றனர்.
14 நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர்களுக்கு மீண்டும் இரண்டு அல்லது மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும்.
அதில் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றனர்.